தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரஷிதா.
மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன்-மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அவ்வளவு ரசிகர்கள் அந்த சீரியலுக்கு பிறகு ரஷிதா என்ற அவரது பெயரை மறந்து மீனாட்சி என்றே அழைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மாற்றி மாற்றி எல்லா மொழிகளிலும் நடிக்கிறார். எனினும் இவர் தமிழில் நடித்த முதல் சீரியலான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
2015ம் ஆண்டு இவர்களது திருமணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது.இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெறுகிறார்கள் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் கசிந்து வந்தன்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகின்றார். திருமணமாகி கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் ஒரு பெண் வாழ முடியாதா? தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்கள், பெண்களை தவறாக பார்க்கப்படும் கண்ணோட்டத்தில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது.
மேலும் பெண்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமூகத்தின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதை அமைந்துள்ளது. இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ரக்தா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. சமீபத்தில் ரக்ஷிதா பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.
அதில், இந்த கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போவதாகவும், தற்போது தனிமையில் இருப்பதாகவும், இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் Maturity-யும் தனக்கு இருப்பதாகவும் ரக்ஷிதா கூறி இருந்தார். அத்தோடு ரக்ஷிதா இப்படி பேசியதை வைத்து அவர் உண்மையில் கணவரை விட்டு பிரிந்துவிட்டார் என்பது உறுதி ஆகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரக்ஷிதா- தினேஷ் இருவரும் பேசிக்கொண்டே ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும் என்ற தகவலும் அவர்களின் நெருக்கமான வட்டாரத்தில் இருந்தார்கள்.
மேலும் இந்த நிலையில் நடிகை ரக்ஷிதா இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இவர்களுடைய திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் ரக்ஷிதா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் அதுவும் அவர் ஒரு இயக்குநரை தான் திருமணம் செய்கிறார் என்ற தகவலும் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால், அவரை பற்றி விவரம் எதுவும் வெளியாகவில்லை. இதுவும் காதல் திருமணம் என்றும் கூறுகின்றனர்.
பிற செய்திகள்
- அரசியலில் களமிறங்கும் நடிகை திரஷா-தீயாய் பரவி வரும் தகவல்..!
- காப்பி சர்ச்சையில் சிக்கிய ரஜனியின் ஜெயிலர் பட போஸ்டர்..!
- நடிகை சினேகாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா..அவரே பதிவிட்ட பதிவு..!
- பிரபல நடிகரை அடிக்க பாய்ந்த மன்சூர் அலிகான்-தீயாய் பரவி வரும் தகவல்..!
- விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு CDP வெளியீடு….திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்வு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!