2015 ஆம் ஆண்டு வெளியான 'பிரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவரது தனி அழகினாலே சினிமா திரையரங்குகளை அசரவைத்தவர்.
மாரி 2, என்.ஜி.கே, கார்க்கி என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜையின் நிகழ்வு அண்மையில் நடைபற்றிருந்தது.
குறித்த பூஜை நிகழ்வில் நடிகை சாய்பல்லவியும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை கிராப் செய்த சிலர் இவர்களுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக வதந்தியை பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில் நான் வதந்திகளை கண்டுகொள்வது இல்லை, ஆனால் குடும்ப உறவினர்களை போல் இருக்கும் உறவுகளை குறித்து வதந்திகள் பரவும் போது அதை பற்றி நான் பேச வேண்டும். என் படப்பிடிப்பு பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேண்டுமென்றே கிராப் செய்து காசுக்காக அருவருப்பான நோக்கத்துடனும் பரப்பி வருகின்றனர். என் அடுத்தடுத்த படம் குறித்த மகிழ்ச்சியான தகவல்களை வெளியிடலாம் எனும் நிலையில் இருந்தேன். ஆனால் இது போன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாகவுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
Listen News!