விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கின்றது.
இதில் அடுத்தடுத்த நாட்களில் யார் வெளியேறுவார்? யார் டைட்டிலை பெறுவார் என்று பிக் பாஸ் ரசிகர்கள் இப்போதே யூகிக்க ஆரம்பித்து விட்டார்கள்.இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்துள்ளதால், முகத்திற்கு நேராக ஒரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்கள் மீது கடுப்பில் உள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது வீக்லி டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அதாவது பிக்பாஸ் நீதிமன்றம் என்ற டாஸ்கே அது.அதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்ந்தெடுக்க வேண்டும் .அவர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வாதாடுவார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் தனலட்சுமி ஆயிஷாவை தனது வழக்கறிஞராக தேர்வு செய்து மைனா மற்றும் ஷிவின் மீது வழக்கு தொடருகின்றார்.ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்ததால் தனலட்சுமி கோபத்தில் ......எனிமேல் என்ர கேமை எப்பிடி விளையாடுறன் எண்டு பாரு என சொல்கிறார்.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!