• Sep 20 2024

ராதிகாவுக்கு கோபி முத்தம் கொடுப்பதை பார்த்த இனியா- எழிலின் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்த ஈஸ்வரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது பாக்கியாவும் ஜெனியும் பேசி கொண்டிருந்தபோது அங்கு எழில் வருகின்றார். அப்போது ஜெனி எழிலிடம் அமிர்தா குறித்து கேட்க அதற்கு எழில் தெரில அமிர்தா வீட்டிலையும் அமிர்தாவும்  என் கிட்ட ஒழுங்காவே பேசிறாங்க இல்ல என்று சொல்லும் போது செழியன் பாட்டிகிட்ட எழில் அமிர்தாவை விரும்புவதை கூறி விட்டதாக கூறுகின்றார்.


இதனைக் கேட்ட எழிலும் பாக்கியாவும் அதிர்ச்சியடைகின்றனர். இதனைத் தொடர்ந்து ராதிகா பிரியாணி சமைச்சு எல்லோருக்கும் வைத்து விட்டு அதனை எல்லோரும் சாப்பிட்டு விட்டு நல்லா இருந்ததாக கூறுவது போல் யோசிக்கின்றார். பின்னர். இது கற்பனை என உணர்ந்து எல்லோரையும் சாப்பிடக் கூப்பிடுகின்றார்.

ஆனால் தாத்தாவும் இனியாவும் எதுவுமே சொல்லாமல் சாப்பிட கோபி ராதிகாவிடம் எந்த கடையில வாங்கிய பிரியாணி சூப்பராக இருக்கு இனிமேல் அங்கேயே வாங்கிடு என கூறிவிட்டு போய்விடுகின்றார். இதை எல்லாம் பார்த்த தாத்தா 25 வருசமா ஒருத்தி சமைச்சு கொடுத்தா அவ கிட்டையே எதுவும் சொல்லல உன்கிட்டயா சொல்லப்போறான் அவசப்பட்டுட்டியே என்று சொல்லுகின்றார்.

இதன் பின்னர்  ராதிகா தனியாக இருந்து யோசிச்சுக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கோபி ஏன் சோகமாக இருப்பதாக கேட்க ராதிகா தான் ஆபிஸில் இருந்து சீக்கிரம் வந்து விட்டதாகவும் தான் தான் சமைச்சதாகவும் கூறுகின்றார். இதனால் அதிர்ச்சியான கோபி ராதிகாவை சமாதானப்படுத்துவதோடு அவரது கையில் முத்தம் கொடுக்கிறார்.


இதனை இனியா பார்த்து விடுகின்றார். இதன் பின்னர் பாக்கியாவும் ஈஸ்வரியும் இருந்து பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் எழிலிடம் ஈஸ்வரி அமிர்தா பற்றி கேட்க பாக்கியா அவள் அவனுடைய ப்ரண்டு மட்டும் தான் என்று சொல்லவும் தனது தலையில் எழிலின் கையை வைத்து சத்தியம் வாங்குகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.














Advertisement

Advertisement