• Sep 20 2024

கண்ணனைப் பார்த்ததும் தாறுமாறாகக் கத்திய மூர்த்தி- செய்வதறியாது தவித்த தனம்- வேடிக்கை பார்த்த முல்லை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

மூர்த்தி வீட்டுக்கு வந்ததும் தனம் கண்ணன் வீட்டுக்குள் நிற்பதை மறைத்து ஏதேதோ கதைகள் சொல்கின்றார். பின்னர் மூர்த்தி உள்ளே சென்று விட முல்லை கண்ணனை வீட்ட கூட்டிட்டு வந்ததைப் பற்றி எப்போ மாமாவுக்கு சொல்லப் போறீங்க எனக் கேட்க, இப்போ தானே வந்தாரு அதுக்குள்ள இது பற்றி சொல்லனுமா கொஞ்சம் பொறுமையாத் தான் சொல்லலாமே என்கிறார்.


தொடர்ந்து மூர்த்தி சாப்பிடுவதற்காக வந்திருக்கும் போது மூர்த்தி தம்பிகளோட இருந்து சாப்பிட்ட நான் இப்போ தனிய இருந்து சாப்பிடுகிறேன் என்று வருத்தப்பட அதுக்கு தனம் அப்போ கண்ணனை நம்ம வீட்டிற்குத் திரும்பக் கூப்பிடுவமா என்று கேட்கின்றார். அதனால் கடுப்பான மூர்த்தி அவன் பற்றி எதுககு பேசிற சாப்பிடும் போது தான் இது பற்றி பேசுவியா எனக் கேட்டு விட்டு செல்கின்றார்.

பின்னர் தனம், கண்ணன் ஐஸ்வர்யாவிடம் சென்று பேச முல்லை திட்டுகின்றார். இருவரையும் தனம் சமாளித்து விட்டு கண்ணனை மூர்த்தி முன்னாடி கொண்டு போய் நிற்க வைக்கின்றார். கண்ணனைப் பார்த்த மூர்த்தி தாறுமாறாகக் கத்த கண்ணன் உள்ளே சென்று விடுகின்றார். அப்போது தனம் யார் இவனை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது எனக் கேட்கிறார்.


அதற்கு தனம் கதிர் தான் கூட்டிட்டு வந்தான் என்று சொல்ல ஓ இது அவன் வீடு தானே அப்போ யார் இருக்கனும் இருக்கக் கூடாது என்று முடிவெடுக்கணும் எங்க கிட்ட எல்லாம் கேட்க மாட்டாரு தானே என்று சொல்கின்றார். இருந்தாலும் தனம் கண்ணன் பண்ணினது எல்லாமே தப்பு தான் அதுக்காக அவங்களை அப்படியே விட்டு விடுறதா எனக் கேட்க மூர்த்தி அமைதியாக நிற்கிறார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement