தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் செல்வராகவன். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வந்த இவர் இறுதியா தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இது தவிர தற்பொழுது படங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் சாணிக்காயிதம் பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.தற்பொழுது திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்துள்ளார் செல்வராகவன் விரைவில் அந்த படம் திரைக்கு வர காத்திருக்கிறது.
இவர் நடிகை சோனியா அகர்வாலைக் காதலித்து திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தார். அதன்பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கோலாகலமாக செல்வராகவன் கொண்டாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.
இவ்வாறுஇருக்கையில் அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியாகத்தான் வந்தோம்.தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என பதிவு செய்தார்.
எனினும் இதனை பார்த்த ரசிகர்கள் அவர் தனது இரண்டாவது மனைவி கீதாஞ்சலியை விவாகரத்து செய்வதால் இப்படி ஒரு பதிவு போட்டாரா என சர்ச்சையாக பேசப்பட்டது.
மேலும் இந்த விவாகரத்து பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்வராகவன் தனது இன்ஸ்டாவில் மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு என்னுடைய வாழ்க்கையில் உள்ள இரண்டு பெண்கள் என்று பதிவு செய்துள்ளார்.
Listen News!