• Sep 20 2024

படத்தோட டைட்டிலே செமயா இருக்கே; யாரோட படம் தெரியுமா?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ஷங்கர் அவர்கள் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்த நிலையில் தற்போது அந்தப்படத்தை கைவிட்டுவிட்டு ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் இப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்தப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியுடன் இணைந்து சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே. சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இன்னமும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் ‘RC 15’ என்றே சமீப காலமாக அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக இருக்கும் போது இப்படத்துக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அனைவருக்கும் பரீட்சயமான ஒரு தலைப்பை வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இந்தப்படத்தில் ராம்சரண் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதால் ‘அதிகாரி’ என்று தலைப்பு வைக்க பரிசீலனை செய்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement