கடந்த 2016 ஆம் ஆண்டு, வெளியான 'கிடாரி பூசாரி மகுடி' என்கிற தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நக்ஷத்திரா. இந்த படத்தை தொடர்ந்து பட வாய்ப்புக்காக முட்டி மோதி பார்த்தும், பலன் இல்லாமல் போகவே, சீரியலின் பக்கம் சாய்ந்தார்.
அதன்படி ஷு தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' என்கிற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.இந்த சீரியலில் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் அமைதியான மற்றும் பொறுப்பான மனைவி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் ஈர்த்தார்
இதனைத் தொடர்ந்து, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வள்ளி திருமணம்' என்கிற சீரியலிலும் நடித்து வந்தார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முதல் தனது காதலர் விஷ்வா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர் கர்ப்பமாக உள்ளதால் சில நாட்கள் மற்ற எந்த சீரியலிலும் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நக்ஷத்திரா தரப்பில் இருந்து, எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும்... இவருடைய தோழிகள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து இவரை, இவரது வீட்டிற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து, தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி வெளியாகவே ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!