• Sep 20 2024

மோசமாக கேள்வி கேட்ட நபருக்கு சீரியல் நடிகை நீலிமா கொடுத்த பதில்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நீலிமா ராணி .அதனைத் தொடர்ந்து பாண்டவர் பூமி ஆல்பம் விரும்புகிறேன் என பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதயத்திருடன் திமிரு ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், அது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

மேலும் இவர் சினிமாவில் நடிப்பதை காட்டிலும் சீரியலில் கொடி கட்டி பறக்கிறார் .மேலும் கோலங்கள், மெட்டி ஒலி, வாணி ராணி போன்ற பல தொடர்களில் நடித்து இருப்பவர் நீலிமா.

சீரியலில் பெரும்பாலும் நீலிமா ராணி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பலரிடமும் திட்டும் வாங்கியுள்ளார்.ஏனென்றால் இவரின் முகபாவனை வில்லி கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருப்பதால்தான்.

இவர் முறைத்தால் வில்லி கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தும் அந்த அளவு மிகவும் பிரபலமடைந்துள்ளார்.இந்த நிலையில் நீலிமா ராணி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் இன்ஸ்டாகிராமில் நீலிமாவிடம் தகாத கேள்வி கேட்டிருக்கிறார். உங்க ப்ரா சைஸ் என்ன என ஒருவன் கேட்க "அதை ஏன் உன்னிடம் சொல்ல வேண்டும், நீ அதை விற்பனை செய்கிறாயா" என கேட்டிருக்கிறார்.

மேலும் இன்னொருவன் செ*ஸ் பற்றி கேள்வி கேட்க அவனுக்கு கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்து இருக்கிறார் அவர்.

Advertisement

Advertisement