• Sep 20 2024

படப்பிடிப்புத் தளத்தில் வழுக்கி விழுந்த சீரியல் நடிகை ரச்சிதா- இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் ரச்சிதா. இந்த சீரியலில் கிடைத்த புகழினால் பல சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் நடித்தார்.

ஆனால் சில காரணங்களாக அதில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அவரது காட்சிகள் தொடரில் குறைக்கப்பட்டது தான் முக்கிய காரணம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதனை தொடர்ந்து தற்போது கலர்ஸ் தமிழில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதில் விதவையான, இரண்டு குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படும் ஒரு பெண் ரோலில் தான் அவர் நடித்து வருகிறார்.

மேலும் மழையில் குழந்தைகள் உடன் அவர் கஷ்டப்படுவது போல காட்சிகள் சமீபத்தில் எடுத்திருக்கிறார்கள். அதில் ரச்சிதா நடித்து இருக்கிறார். அவர் குடையை எடுத்து நடக்கும்போது கீழே வழுக்கி விழுந்திருக்கிறார். அந்த வீடியோவை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement