• Sep 20 2024

ஓணம் பண்டிகை ஸ்பெஷலாய் தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை ரஷ்மிகா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் குடும்ப பாங்கான தொடர்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டஒரு தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் முதல் பாகம் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் கொரோனாவின் தாக்கத்தினால் சீரியல் இடை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது வேறோரு கதைக்களத்துடன் இந்த சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த வகையில் முதல் பாகத்தில் தாமரை என்ற வேடத்தில் நடித்து வந்தவர் ரஷ்மிகா. இவருக்கு ஜெயராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது, திருமண புகைப்படங்களை அவரே வெளியிட்டார்.



அதன்பின் ரஷ்மிகா ராஜபார்வை என்ற தொடரில் நாயகியாக நடித்து வர அந்த சீரியலையும் சீக்கிரமே முடித்து சுபம் போட்டுவிட்டார்கள்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.இவ்வாறு இருக்கையில் ஓணம் பண்டிகையை பலரும் கொண்டாடும் நிலையில் தனது மகளுடன் அழகாக கொண்டாடியுள்ளார் ரஷ்மிகா.



அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.




Advertisement

Advertisement