• Sep 20 2024

நீ இல்லாமல் தனியாக போறேன்... கணவனின் இறப்பைத் தொடர்ந்து... சீரியல் நடிகை ஸ்ருதி வெளியிட்ட மனதை உருக்கும் பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்'என்ற சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இதனைத் தொடர்ந்து இவர் வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.


அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அத்தோடு 2016 ஆம் ஆண்டு வெளியான கொடி என்ற படத்திலும் நடித்திருக்கிறார். 

மேலும் இவர் வக்கீலும், பொறியாளரும், உடற்பயிற்சி ட்ரையினராக இருந்த அரவிந்த் சேகர் என்பவரை 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பால் சமீபத்தில் உயிரிழந்தமை பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


இந்நிலையில் ஸ்ருதி கணவனின் இறப்பைத் தொடர்ந்து தற்போது பதிவு ஒன்றினை இட்டுள்ளார். இப்பதிவில் "கனத்த இதயத்தில் பல நினைவுகள் மிளிர்கின்றன, முதன்முறையாக நீ இல்லாமல் சென்னையை விட்டு வெளியேறுவது மிகவும் கடினமாக இருக்கிறது, நான் எங்கு சென்றாலும் உன்னையும் நினைவுகளையும் என் இதயத்தில் என்றென்றும் அழைத்துச் செல்கிறேன்! இனிவரும் வாழ்க்கைப் பயணத்திலும் இதையே செய்வேன்" என மிகவும் உருக்கமாக பதிவிட்டிருக்கின்றார்.


Advertisement

Advertisement