• Sep 20 2024

இறப்பை முன்பே கணித்த சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர்..? வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்'என்ற சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இதனைத் தொடர்ந்து இவர் வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். 


அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அத்தோடு 2016 ஆம் ஆண்டு வெளியான கொடி என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இவர் வக்கீலும், பொறியாளரும், உடற்பயிற்சி ட்ரையினராக இருந்த அரவிந்த் சேகர் என்பவரை 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். 

திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இந்த திடீர் உயிரிழப்பானது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


இதனையடுத்து அரவிந்த் சேகரின் பழைய இன்ஸ்டா பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது சில வாரங்களுக்கு முன்னர் பாரிஸில் மனைவியோடு எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டு, “நல்ல நினைவுகளோடு இறக்க வேண்டும், நிறைவேறாத கனவுகளோடு அல்ல" என அரவிந்த் குறிப்பிட்டு இருந்தார். 


இந்தப் பதிவைப் பார்த்த பலரும் அவர் மரணத்தை முன்பே கணித்துள்ளதாக கூறி கவலையுடன் தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement