தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து, பின்னர் 'கல்யாணம் முதல் காதல் வரை' எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
பின்னர் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' என்ற படத்தில் வைபவ் -க்கு ஜோடியாக அறிமுகமானார் பிரியா பவானி சங்கர். இதுவரை இவர் நடித்த படங்கள் அனைத்தும் செலவழித்த முதலை விட அதிகளவிலேயே வசூல் செய்துள்ளது.
இவர் அறிமுகமாகி 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 17 படங்கள், 2 வெப் சீரிஸ் என தனது மார்க்கெட்டை குறைய விடாது உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அதுவும் இவருடைய படங்கள் சாதாரண படங்கள் எல்லாம் கிடையாது. இந்நிலையில் தற்போது முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து இவர் நடித்த பல படங்கள் வெளியாகவுள்ளன.
அதில் ஒன்று 'குருதி ஆட்டம்' என்ற படம். இப்படத்தை ஸ்ரீ கணேஷ் எழுதி இயக்கி இருக்கின்றார். இப்படத்தில் நடிகர் அதர்வா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். அத்தோடு இவர்களுடன் இணைந்து நடிகை ராதிகா சரத்குமார் துணை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் நிறைவடைந்த நிலையில் கடந்த 24 டிசம்பர் 2021 அன்று வெளியிட தீர்மானிக்கப்பட்டது, ஆனால் சட்டச் சிக்கல்கள் சிலவற்றின் காரணமாக இப்படத்தின் உடைய வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்ததாக பிரபல இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் , ராதிகா சரத்குமார் , சமுத்திரக்கனி, அம்மு அபிராமி , மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள படம் 'யானை'. இப்படமானது ஜூலை 1-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படம் கிராமத்து நாயகன் கதைக்களத்தை மையமாகக் கொண்டு அமைந்திருக்கின்றது. அது மட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினையும் இப்படம் ஏற்படுத்தி இருக்கின்றது.
இதே போன்று இயக்குநர் மித்ரன் ஜவஹர் எழுதி இயக்கி வரும் இசை நகைச்சுவை நாடகத் திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்' ஆகும். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்து இருக்கின்றார். மேலும் இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து டைட்டில் ரோலில் ராஷி கண்ணா , நித்யா மேனன் , பிரியா பவானி சங்கர் , பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா ஆகிய பிரபலங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அடுத்ததாக இயக்குநர் கதிரேசன் இயக்கிய தமிழ் அதிரடித் திரைப்படங்களில் ஒன்று ருத்ரன். இப்படத்தில் நடிகர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரோடு இணைந்து நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் 'ருத்ரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குநர் ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கிய ஒரு ஆக்ஷன் நாடகத் திரைப்படம் 'பத்து தல' ஆகும். இப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இவர்களோடு இணைந்து நடிகை பிரியா பவானி சங்கரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். அத்தோடு இப்படத்தை 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
இவ்வாறாக கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரை நாயகியாக இருந்து வெள்ளித்திரையின் நாயகியாக மாறி இருக்கின்ற இவரை ரசிகர்கள் கோலிவுட்டின் ராசியான நடிகை என்றே செல்லமாக அழைத்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- இன்ஸ்டா அக்கவுண்டை ரகசியமாக வைத்திருக்கும் பிரபல நடிகர்- அட இவர் பிரபல நடிகையின் கணவராச்சே
- திருமணத்திற்கு பிறகு நடிகை நயன் நடிக்கவுள்ள திரைப்படம்- யார்கூட தெரியுமா?
- திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சூர்யாவின் ரீல் அப்பா
- காலை நேரத்தில் செம மாடர்ன் லுக்கில் வித்தியசமான போட்டோஷுட் நடத்திய பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!