• Sep 19 2024

ஏழு வருட காதலா ? காதல் கதைபற்றி மனம் திறந்த விக்கி

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகராகவும் இயக்குனராகவும் , தமிழ்திரைப்படங்கில் பங்காற்றி வருபவர் தான் விக்னஷே் சிவன் இவர் சிவி, போடாபோடி, வேலையில்லா பட்டதாரி,நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் என பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தவர்


சினிமாவில் விக்கி கெத்து காட்டிவரும் நிலையில் நயன்தாராவும் மாஸ்காட்டியுள்ளார்.  அந்நிலையிலே விக்கி 2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் இயக்குனராக பணியாற்றியிருக்கின்றார்.அப்படத்தில்  இருந்தே இருவரும் காதலித்து 2021யூன் மாதம்  காதல் திருமணம் செய்துள்ளனர்.தற்போது இரட்டை குழந்தைகளும் இருக்கின்றது.


இந்நிலையில் நேற்றைய தினம் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் என்பதால் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில்  விக்னேஷ் சிவன் தன் மனைவியான நயன்தாராவை எப்படி முதன் முதலில் சந்தித்தார் என்பதை பற்றி ஓப்பனாக  பேசியுள்ளார்.


மனம் திறந்த விக்கி 
நானும் ரவுடி தான் படத்தின் கதையை நயன்தாராவிடம் சொல்லுமாறு தனுஷ் என்னை அனுப்பினார் . நானும் என் உதவி இயக்குனரும் ஆட்டோவில் நயன்தாராவை பார்த்து கதை சொல்ல சென்றோம். எப்படியும் நயன்தாராவிற்கு கதை பிடிக்காது, இருந்தாலும் அவரை ஒரு மணி நேரம் நேரில் பார்க்கலாமே என்று நினைத்து கொண்டு தான் நயன்தாராவிடம் கதை சொல்ல போனேன். ஆனால் நயன்தாராவிற்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. நான் சொன்ன முழு கதையையும் கேட்டுவிட்டு படத்தில் நடிப்பதாக கூறினார்.

இது தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் முதல் சந்திப்பாம். இதையடுத்து நானும் ரவுடி தான் படப்பிடிப்பு துவங்கிய ஒரு சில மாதங்களிலேயே அவர்களுக்குள்  காதல் மலர்ந்துவிட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் கிட்டத்தட்ட 7 வருடங்கள் வரை காதலித்து  திருமணம் செய்துள்ளனர்.

Advertisement

Advertisement