செவ்வந்தி சீரியலில் நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். அவரது கணவர் அர்னாவ்வும் சீரியல் நடிகர் தான்.
மேலும் அவர்கள் இடையே திருமணத்திற்கு பின்னர் பிரச்சனை ஏற்பட்டதாகவும், திவ்யா கர்ப்பமாக இருக்கும்போதே அவரை தாக்கிவிட்டு சென்றுவிட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
திவ்யா ஸ்ரீதருக்கு சீரியல் குழுவினர் தான் வளைகாப்பும் செய்தனர். அதன் போட்டோ வீடியோவும் அப்போது வெளியாகி இருந்தது. அதன் பின்னர் திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
எனினும் தற்போது திவ்யா ஸ்ரீதர் தனது குழந்தை போட்டோவை வெளியிட்டு உருக்கமாக பேசி இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பிறந்த குழந்தையை கூட இன்னும் நடிகை அர்னவ் வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஈகோவை விட்டுவிட்டு குழந்தையை பார்க்க செல்லுங்கள் என ரசிகர்களும் இன்ஸ்டாகிராமில் அவருக்கு அட்வைஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!