கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சியானது தமிழ், ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நேற்று முன் தினம் ஆரம்பமானது. நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் தெலுங்கு நடிகர் சிவாஜி, ஷகிலா, நடிகை கிரண், பிரியங்கா ஜெயின், பாடகி தாமினி பட்லா, யூடியூபர் டேஸ்டி தேஜா, டான்ஸர் ஆட்டா சந்தீப், இசையமைப்பாளர் போலே ஷவாலி, இளம் விவசாயியாக அறியப்படும் பல்லவி பிரஷாந்த், டாக்டர் கௌதம் கிருஷ்ணா, சுபஸ்ரீ, சின்னத்திரை நடிகர் பிரின்ஸ் யாவர், அமர்தீப், அர்ஜுன் அம்பதி, ஷோபனா ஷெட்டி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களில் நடிகை கிரண் முதல் வாரத்திலேயே குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார். பொதுவாக பிக்பாஸ் ஷோவில் ஸ்மோக்கிங் செய்ய தனி அறை இருக்கும். ஆனால் தெலுங்கு பிக்பாஸில் அவ்வாறான தனி அறை இல்லை போல் தெரிகிறது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷகீலா உட்கார்ந்து புகைப்பிடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
Listen News!