பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் தற்போது 'பதான்' என்ற திரைப்படம் பிரமாண்டமான முறையில் தயாராகி உள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படமானது வருகிற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
அந்தவகையில் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது இதில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் பெஷாரம் ரங் என்கிற பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் செய்யப்பட்டது.
ரிலீஸ் ஆன நாள் முதல் இன்றுவரை இப்பாடல் சிக்கலில் சிக்கிய வண்ணம் தான் இருக்கின்றது. இதில் விதவிதமான பிகினி உடைகளில் வந்து தீபிகா படுகோனே கவர்ச்சி நடனம் ஆடுவார். அதில் குறிப்பாக ஒரு காட்சியில் மட்டும் காவி நிற பிகினி உடையில் நடனமாடி இருப்பார். அதற்கு தான் தற்போது தாறுமாறாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அதாவது மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சராக இருக்கும் நரோத்தம் மிஸ்ரா, இப்பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, அதை நீக்காவிட்டால் 'பதான்' படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பதான் படத்தை புறக்கணிக்கக்கோரி பாய்காட் டிரெண்டும் வைரலானது.
இந்நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வீர சிவாஜி அமைப்பினர் பதான் பட பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மற்றும் நடிகை தீபிகா படுகோனேவின் உருவ பொம்மைகளை எரித்ததோடு மட்டுமின்றி சாலை மறியலிலும் ஈடுபட்டு உள்ளனர்.
Listen News!