• Sep 20 2024

நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாருக்கான்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி 'ராஜா ராணி' என்ற படத்தினை இயக்கி தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து, இன்று தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் அட்லீ. இவர் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கால் பதிக்க ஆரம்பித்து விட்டார்.

அதாவது 'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', போன்ற பல படங்களை இயக்கிய அட்லீ விஜய் நடித்த 'பிகில்' படத்தை தொடர்ந்து, தற்போது ஹிந்திப் படம் ஒன்றினை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகனாக பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நடிக்கவிருக்கின்றார். இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கின்றார். இப்படத்தினுடைய பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் "ஜவான் படம் கைவிடப்பட்டது, நயன்தாரா அந்தப் படத்தில் இருந்து விலகி விட்டார்" என்றெல்லாம் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி இருந்தன. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் இது தொடர்பாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அது உண்மை இல்லை வதந்தி என சமூக வலைத்தளத்தினூடாக பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில் "ஜவான் படத்தில் நயன்தாரா ஜி இருக்கிறார். அவர் அப்படத்தில் நடிப்பது உறுதி" எனத் தெரிவித்து இருக்கின்றார். மேலும் "அட்லீக்கும் எனக்கும் இடையே நல்லதொரு கெமிஸ்ட்ரி இருக்கின்றது, அந்த கெமிஸ்ட்ரி திரையில் தெரியும்" எனவும் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

அவர் இவ்வாறு கூறியதை கேட்ட ரசிகர்கள் அப்படத்தை மேலும் எதிர்பார்க்கின்றார்கள். அது மட்டுமல்லாது நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த குதூகலத்திலும் இருக்கின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement