• Sep 21 2024

மறுபடியும் சர்ச்சையை கிளப்பிய ஷாருக்கானின் மகன்…வெளியான ஆதாரங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் கிங் கான் என அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல் தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய இவர் படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு இன்று இந்தளவிற்கு உயர்ந்து நிற்கின்றார். அதுமட்டுமன்றி பல விருதுகளையும் வென்றிருக்கினார்.

இதனைத் தொடர்ந்து இல்லற வாழ்வில் இணைந்த இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகனான ஆர்யன் கான் கடந்த வருடம் மும்பை சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாகக் கூறி போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்த ஒரு விடயமே. எனினும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் இடம்பெறாமையினால் 20 நாட்களுக்கும் அதிகமாக சிறையில் இருந்த இவர் விடுவிக்கப்பட்டார். இதனால் இவரது தந்தையும் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்தப் பிரச்சினையில் இருந்து முற்றிலும் வெளியில் வந்து விட்ட ஆர்யன் கான் தற்போது மறுபடியும் தனது சகஜமான வாழ்க்கையை தொடங்கி விட்டார். அதாவது திரும்பவும் நைட் கிளப் மற்றும் பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் ஆர்யன் கான் மது அருந்துவது தொடர்பான வீடியோ, மற்றும் அது குறித்த போட்டோக்கள் என்பன வெளியாகி இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றன. இதில் ஆர்யன் கான் முகம் சரியாகத் தெரியாவிட்டாலும் அது ஆர்யன் கான் தான் எனப் பலரும் கூறி வருகின்றார்கள். இது தொடர்பாக தற்போது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தோடு ஒரு சிலர் ஆர்யன் கானிற்கு ஆதரவு தெரிவித்து "ஆர்யன் கானை வாழ விடுங்கள்" எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி ஆர்யன் கான் இப்போது நடிப்பில் தான் அதிகமாக கவனம் செலுத்தி வருவதாக சினிமாவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement