தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக அறிமுகமாகியவர் தான் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி தெறி மெர்சல் பிகில் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமல்லாது வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.இதனை அடுத்து பாலிவூட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.
இப்படம் வரும் ஏப்ரல் மாதத்தில் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.நடிகர் ஷாருக்கான் -தீபிகா படுகோனே உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது பதான் படம். இந்தப் படம் வெளியாகி 8 நாட்களிலேயே 600 கோடி ரூபாய்க்கும் மேலாக சர்வதேச அளவில் வசூலித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்தப் படத்தையொட்டி நடிகர் ஷாருக்கான் ரசிகர்களை தொடர்ந்து பார்த்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரது வீட்டின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் திரண்டு, பதான் படத்தின் சக்சசை அவருடன் பகிர்ந்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது தன்னுடைய வீட்டின் பால்கனியில் இருந்து அவர் ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார்.
இதையடுத்து டுவிட்டர் பக்கத்தில் ஷாருக்கான் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர், இயக்குநர் அட்லியின் குழந்தை குறித்த கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஷாருக்கான், he is too sweet என்றும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் பதிலளித்துள்ளார்.
Masha Allah you met him already 🥹 Mumbai mein huye hai Baby Jawan ke shoot ke liye aaww ..he is the Jawan atlee 🤌🏼 Lots of Love & Duaas for the little one, Allah tandurusti de.. you meeting him must be the sweetest thing, he is just a few days old & you held him in your arms 💖 pic.twitter.com/P3ghHIjz9e
அட்லியின் மனைவி பிரியா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 31ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர்கள் இருவரும் இணைந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டனர். இந்நிலையில், ஷாருக்கான், அந்தக் குழந்தை குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
Listen News!