இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் ஷாருக்கான். கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு 'பதான்' படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்களிடத்தே நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது.
அடுத்து அட்லீ இயக்கத்தில் அவர் ஜவான் படத்தில் நடித்து வருகின்றார். மேலும் அதன் ஷூட்டிங் சென்னையில் ஒரு மாத காலம் நடைபெற்ற நிலையில் அந்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
இவ்வாறுஇருக்கையில் தற்போது ஷாருக்கான் ட்விட்டரில் ரசிகர்கள் உடன் உரையாடினார். அப்போது விஜய் உடன் எப்போது சேர்ந்து நடிப்பீங்க என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஷாருக் பதில் தெரிவித்தார்.
"விஜய் உண்மையிலேயே கூல் guy.. இணைந்து படம் நடிப்பது நடக்கும் போது நடக்கும்… நடக்க வேண்டும் என இருந்தால் தான் நடக்கும்" என குழப்பமாக அவர் பதிலளித்து இருக்கிறார்.
Listen News!