விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பொன்னி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.
அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பொன்னி தன்னுடைய அம்மா தன் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் ஒரு டோலர் வாங்கிக் கொடுத்ததால் அதனை ஷக்தி தன்னுடைய கழுத்தில் போட்டிருக்கின்றார்.
இந்த நிலையில் ஜெயாவுக்கு ஷக்தி அந்த டோலரை கழுத்தில் போட்டிருப்பது பிடிக்கவில்லை. இதனால் ஷக்தியின் மாமா காரில் போகும் போது ஷக்தியிடம் உங்க அம்மாவுக்கு நீ அந்த டோலர் போட்டிருப்பது பிடிக்கவில்லை. நீ ஏன் போட்டிருக்கிறாய் என்று கேட்கின்றார். அப்போது ஷக்தி அம்மாவுக்கு பிடிக்காவிட்டால் அந்த டோலர் வேண்டாம் என்று கழட்டி ஒரு கோயிலில் வைக்க போகின்றார்.
அந்த நேரம் ஒரு லாறி வந்து ஷக்தி மீது மோதப் பார்க்க ஜெயா ஷக்தி என்று கத்துகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!