• Sep 21 2024

பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஷக்தி - பதறிப்போய் கலக்கத்தில் இருக்கும் ஜனனி- செம சந்தோஷத்தில் இருக்கும் நந்தினி மற்றும் ரேனுகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.

அதாவது ஜனனி ரேனுகாவுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு லெட்டரை வழங்குகின்றார். அதை வாங்கிப் பார்த்த ரேனுகாவும் நந்தினியும் சந்தோஷப்படுகின்றனர். அத்தோடு ரிஜிஸ்டர் பண்ணிட்டியா என்று கேட்டு சந்தோசப்படுகின்றனர்.


இதனை அடுத்து விடிந்ததும் ஜனனி ஓடி போய் நந்தினியையும் ரேனுகாவையும் தான் தங்கியிருக்கும் ரூமுக்குள் அழைத்துச் செல்கின்றார்.அங்கே ஷக்தி படுத்த படுக்கையாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement