• Sep 20 2024

'படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் என் நெருங்கிய தோழி ஆகிவிட்டார்'- பிரபல நடிகையைப் புகழ்ந்த தனுஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருப்பதோடு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகிகளாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்திருப்பதோடு இவர்களுடன் பிரபல இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முறையே தனுஷின் தாத்தா மற்றும் அப்பா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ விழாவில் நடிகை நித்யா மேனன் பற்றி பேசிய நடிகர் தனுஷ், “நடிகை நித்யா மேனனின் திறமை பற்றி பேசிக் கொண்டே போகலாம். இன்னும் பத்து நிமிடம் தான் பகல் வெளிச்சம் இருக்கும், அதற்குள் ஷூட்டிங்கை முடிக்க வேண்டும் என்றால், நித்யா மேனன் இருந்தால் தைரியமாக சூட்டிங் போய்விடலாம்.அந்த காட்சி நிறைவடைந்து விடும். அப்படி ஒரு அதிக திறமை உள்ளவர்.

மேலும் நித்யா மேனனை பார்த்து உங்களுடன் சேர்ந்து நிறைய திரைப்படங்கள் நடிக்க ஆசைப்படுகிறேன், நான் அவ்வளவு ஈஸியாக சொல்ல மாட்டேன். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யா மேனனை சிறந்த தோழி ஷோபனா என்று அறிமுகப்படுத்துவோம். இப்போது என் வாழ்க்கையிலும் அவர் எனது சிறந்த தோழியாக இருக்கிறார்.” என்று குறிப்பிடுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement