• Sep 20 2024

அவரு தான் இந்த விஷயத்தை தொடங்கி வைத்துள்ளார்- அஜித்தை விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த நடிகை காயத்திரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2019ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நெர் கொண்ட பார்வை. இப்படத்தினை இயக்குநர் எச். வினோத் இயக்கியிருந்தார்.இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

 கட்டிய மனைவியாக இருந்தாலும் அவருடைய அனுமதி இல்லாமல் அவரை தொடக்கூடாது என்ற கருத்தை கூறும் விதமாக இப்படம் வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப்படம் வெளியாகி நேற்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பேமிலி பிளாக்பஸ்டர் படமான விஸ்வாசத்திற்கு பிறகு A செண்டர் மற்றும் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வையில் அஜித் நடித்தது தான் அவரது சினிமா வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு.இதனால் அவரின் குடும்ப ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது என்று தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு நடிகை காயத்ரி தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அவர் பகிர்ந்த பதிவில், ஒரு படத்திற்கான வெற்றியின் அளவுகோல் என்பதை வசூலை தாண்டி சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பொறுத்து இருக்க வேண்டும். இந்த சமூகத்தில் பல ஆண்டுகளாக விவாதிக்க வேண்டிய விஷயத்தை 'நேர்கொண்ட பார்வை' படம் மூலம் நடிகர் அஜித் துவங்கி வைத்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.


'நேர்கொண்ட பார்வை' படம் தொடர்பான நெகட்டிவ் விமர்சனத்திற்கு நடிகை காயத்ரி கொடுத்துள்ள பதிலடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement