தமிழ்த் திரையுலக நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட விடயங்களை எடுத்து பேசி சர்ச்சையில் சிக்கி வருபவர் தான் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். இந்த நிலையில் இவர் அண்மையில் வெளியாகியிருந்த இரவின் நிழல் திரைப்படம் குறித்து விமர்சித்திருந்தார்.
அதிலும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பேசியிருந்தார்.இதனால் வாக்கிங் சென்ற இடத்தில் ரேகா பயில்வானை கண்டவுடன் கொஞ்சம் கூட மதிக்காமல் வார்த்தைகளை மோசமாகக் கொட்டித் தீர்த்தார்.
அதில் ரேகா நாயர் நான் என்ன உன் பொண்டாட்டியா இல்ல மகளா என்னை பற்றி நீ எப்படி பேசலாம், செருப்பு பிஞ்சிடும் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி ஆக்ரோஷமாக சண்டையிட்டார். அப்படி என்ன ஆபாசத்தை பார்த்தீர்கள், டிரஸ்ஸை அவுத்து காட்டவா என்றும் படுமோசமாக சண்டையிட்டார். அதன் பிறகு அங்கு சுற்றி இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்ப முயன்றனர். ஆனாலும் விடாத ரேகா நாயர் பயில்வனை அடிக்க பாய்ந்தார். அப்போது பயில்வான் அவரை தடுத்து அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.
இதனைத் தொடர்ந்து பிரபல சேனல் ஒன்றிற்கு பயில்வான் பேட்டியளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது ரேகா என்னிடம் நடந்து கொண்டது ஒரு செட்டப்.அவர் என்னுடைய கையைப் பிடித்து எல்லாம் இழுத்தார். பதிலுக்கு நான் ஏதாவது செய்வேன்.அதன் மூலம் ஏதாவது பிரச்சினையில் சிக்க வைக்கலாம் என்பது தான் அதோட பிளான்.
இப்பவும் கூட என்னோட நலன்விரும்பிகள் போலீஸ்ல போய் கம்லெய்ன்ட் கொடுங்க என்று சொன்னாங்க. ரோட்டில போகும் போது தெருநாய் கடிச்சா நாம என்ன பண்ணேலும் .அப்படித் தான் இந்த பொண்ணோட கதையும் இந்தப் பொண்ணு மானம் கெட்டு போய் நிர்வாணமாக நடித்தால் பிரச்சினை இல்லையாம் அதை நான் சொன்னால் தான் பிரச்சினையா?
நாட்டில எவ்வளவோ பிரச்சினை இருக்கு அதை யூடியூப் சேனல்கள் பேசினால் நல்லா இருக்கும் இப்படி சீஃப்பான விடயத்தை பேசி என்ன லாபம்.இது எல்லாமே பிளான் தான். வேணும் என்று ஒரு பிரச்சையை உருவாக்கி என்னை சிக்கல்ல சிக்க வைக்கிறது தான் அவங்க பிளான். ஆனால் நான் அதில சிக்கல. இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்திட்டு நல்லதாகத் தான் பேசினேன். ரேகா நாயர் நிர்வாணமாக நடிச்சிருக்கிறாங்க என்று தான் கூறினேன். இது தவிர அது நல்லதா கெட்டதா என்று நான் சொல்லவே இல்லை. இது அவளா கற்பனை பண்ணிட்டு பேசிட்டு இருக்கிறார் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து அந்த பேட்டியில் பாரத்திபன் ரேகா பேசிய தவறான வார்த்தைக்காக மன்னிப்புக் கேட்ட ஆடியோவையும் வெளியிட்டிருந்தார்.அத்தோடு ரேகா எனக்கு செருப்பு காட்டியிருந்தால் காலை முறிச்சிருப்பேன் என்றும் கூறினார்.அத்தோடு இந்த வீடியொ பார்த்த பலரும் என்னை பாராட்டினாங்க சேர் நீங்க அந்த டைம்ல ரொம்ப பொறுமையாக இருந்தீங்க என்றும் சொன்னாங்க.அத்தோடு அந்த வீடியோ வெளியில வராவிட்டால் ரேகா ஏதோ வயித்துப் புழைப்புக்காக அப்படி பண்ணுறா என்று விட்டிருப்பேன். இப்போ இந்த நடிகைகள் செய்யிற வேலைகளால் இரவின் நிழல் திரைப்படத்தினை பெண்கள் பார்க்க செல்வது குறைந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.அத்தோடு நான் இன்னும் இரண்டு நாளில் ரேகா நாயர் மீது கம்லெயின்ட் கொடுப்பேன் என்றும் அவர் கூறியதைக் காணலாம்.
பிற செய்திகள்
- பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல்- இதுவரை மட்டுமே இவ்வளவு வசூலா?
- சிகிச்சை முடிந்து சென்னை வந்த டி.ராஜேந்தர்- சிம்பு திருமணம் குறித்து பேட்டி
- இரவு முழுவதும் அவர விடாம பாத்துக்கிட்டே இருப்பேன் – நடிகை அதுல்யா ரவி
- AK 61 படத்திற்கு பின் ஹெச்.வினோத்தின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்..?
- குக்வித் கோமாளி கடைசி நாள் ஷூட்டிங் போட்டோக்கள் -அட யார் யார் உள்ளார்கள் பாருங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!