• Sep 20 2024

புடவை கட்டி குடும்பக் குத்துவிளக்காக மாறிய ஷிவானி நாரயணன்- வாவ் இவ்வளவு சூப்பராக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஜு தமிழில் இரட்டை ரோஜா என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

இந்த சீரியல் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்த இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்குபற்றினார். இந்த நிகழ்ச்சியில் பாலாஜியுடனுன் காதல் வலையில் விழுந்ததாக கிசுகிசுக்கப்பட்டார். இருப்பினும் தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று தான் கூறி வருகின்றனர்.

இதனை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாகவும் நடித்து வந்தார்.இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருவார். அந்த வகையில் தற்பொழுது புடவை கட்டி பூஜை அறையின் முன்னால் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement