• Sep 20 2024

முதல் முறையாக தனது காதலன் குறித்து மனம் திறந்து பேசிய ஷிவின்- இவருக்குள் இப்படி ஒரு சோகமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களில் அதிகம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இதில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் ஷிவின்.

திருநங்கையான இவர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஹவுஸ்மேட்டினால் எதிர்க்கப்பட்டார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அனைத்து ஹவுஸ்மேட்களுடனும் நல்ல உறவில் இருந்த வருகின்றார். குறிப்பாக பேக்கரி டாஸ்கிற்கு பிறகு ரச்சிதாவுடன் நல்ல நட்புடன் பழகி வருகின்றார்.


அந்த வகையில் இவர் ரச்சிதாவுடன் இருந்து பேசிட்டு இருக்கும் போது தனது காதல் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். அதாவது நாங்க ரெண்டு பேரும் ஜடி கம்பெனில வேலை செய்யும் போது லவ் பண்ணினோம். லவ் நல்லாத் தான் போய்க்கிட்டு இருந்தபோது இது எங்க அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சு. அம்மா சொனனாங்க இதெல்லாம் வேணாம்.

அவங்க வீட்டுக்கு உன்னைப் பற்றி தெரியாது தெரிய வரும் போது அவங்க எப்படி ஏற்றுக் கொள்வாங்க என்று தெரில பெற்றோருடைய சாபத்தை வாங்கிட்டு அந்த கல்யாணத்தை பண்ணாத. அவரை விட்டிரு என்று சொன்னாங்க. நானும் அதனை யோசிச்சு அவர் கிட்ட சொன்னேன். இனி நாம பேச வேணாம் நீங்க நல்ல வாழ்க்கைய அமைச்சுக்கோங்க என்று கூறி பிரிஞ்சிட்டோம்.


அதுக்குப் பிறகு அவங்க சிங்கப் பூருக்கு போய்ட்டாங்க எனக்கும் அங்க போக சந்தர்ப்பம் கிடைச்சது.ஆனால் என்னால அங்க போகமுடியாது என்று சொல்லி இங்கேயே இருந்திட்டேன். நான் இருக்கும் போது அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் இப்போ நிறைய கெட்ட பழக்கம் வச்சிருக்கிறாரு என்ற கேள்விப் பட்டேன். இருந்தாலும் என்ன பண்ண முடியும் அவரோட லைப்ல நல்ல பொண்ணா அமைஞ்சு சந்தோசமாக இருக்க வேண்டும்.

அத்தோடு அவங்க வீட்டில இருக்கிறவங்க என்கிட்ட பேசி இருக்கிறாங்க நல்ல பிரண்ட் என்று தெரியும் ஆனால் எனக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்கு என்றும் நாங்க லவ்ல இருக்கிறோம் என்றும் தெரியாது.அவங்க வீட்டுக்காரங்க பேசுவாங்க. இப்போ அவங்க கூட பேசிறது இல்ல. எங்க வீட்டில அவரோட லைப்பை வேஸ்ட் பண்ணிடாத என்று கூறினாங்க அதனால நானும் விலகிட்டேன்.

நான் அவர் கிட்ட பேசாமல் விட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்த பிறகு கொரோனா லாக்டவுன் காலத்தில் எனக்கு முப்பதாயிரம் ரூபா போட்டு விட்டார். எனக்கு இவர் தான் காசு அனுப்பினது என்று தெரியாது. பின்பு தெரிய வர அந்த காசை அவங்க வீட்டுக்கே திரும்பி அனுப்பி வச்சிட்டேன். இப்பவும் அவர் என்னை மறக்காமல் இருப்பது எனக்கு கஷ்டமாகத் தான் இருக்கு . அவரைப் போல நானும் அவரை மறந்திட்டு வாழுறது என்பது கஷ்டம் தான் என்றும் மனம் உருகப் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

















Advertisement

Advertisement