• Sep 20 2024

போன் பண்ணி மன்னிப்புக் கேட்ட கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி- குழப்பத்தில் கதறி அழும் இனியா- சந்தோசத்தில் ஓடிய அமிர்தா-Baakiyalakshmi

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

செழியன் இனியாவை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போக முடியாது என்று சொல்லி விட்டதால் எழில் என்ன செய்வதென்று யோசிக்கின்றார். பின்னர் மறுபடியும் செழியன் பாக்கியாவுக்கு போன் பண்ணி அன்டைக்கு நைட் வர முடியாது ரொம்ப வேலை என் சொல்கின்றார். இதனால் பாக்கியாவும் ஓகே சொல்லி விட்டு இனியா தனியாக இருப்பா அவ கிட்ட போய் பேசுறே


அப்போது ரூமுக்குள் போகும் போது இனியா டூருக்கு போக முடில என்று நினைச்சு அழுது கொண்டிருக்கும் போது பாக்கியா சமாதானப்படுத்துகின்றார். அத்தோடு நீ கட்டாயம் ட்ரிப்புக்கு போவ உன்னை எழில் கூட்டிட்டு போவான், நீ போய் கவலைப்படாமல் துாங்கு என்று சொல்கின்றார். பின்னர் விடிந்ததும் இனியாவை யார் கூட்டிட்டு போறது என்ற பஞ்சாயத்து நடைபெறுகின்றது.

எழில் கூட்டிட்டு போறேன் என்று சொல்ல பாக்கியா நீ வேலைய விட்டிட்டு போகவேணாம் என்று சொல்ல எழில், அப்போ நீயே கூட்டிட்டு போ என்று சொல்ல பாக்கியாவும் ஓகே சொல்கின்றார். அப்போது பாக்கியா நாங்க ரெண்டு பேரும் எப்பிடி தனியா போறது மாமாவாலையும் முடியாது அத்தை நீங்க வாறீங்களா என்று கேட்க முதலில் மறுப்புத் தெரிவித்த ஈஸ்வரி பின்னர் இனியா கேட்டதால் ஓகே சொல்கின்றார்.


மேலும் ஈஸ்வரி எங்க கூட செல்வியும் வரட்டும் நீங்க ரெண்டு பேரும் ஏதும் அலுவலாகப் போனால், இவ என்கூட இருப்பா தானே என்று சொல்ல பாக்கியாவும் ஓகே சொல்கின்றார். பின்னர் கிச்சனில் அமிர்தாவிடம் கான்டீனில் ராதிகா ஏதவது சொன்னால் எனக்கு போன் பண்ணு என்கிறார். அப்போது ஈஸ்வரி எப்போ கிளம்ப போறோம் என்று கேட்க சாயங்காலம் 5 மணிக்கு போகலாம் அத்தை என்கின்றார்.

இதனால் ஈஸ்வரி அப்போ நான் கொஞ்சநேரம் துாங்கிறேன் என்று போக செல்வி வீட்டில எல்லோரும் வெளில போறோம் நீயும் எழில் தம்பியும் தான் ஜாலியாக இருங்க என்று சொல்ல அமிர்தா வெட்கப்பட்டுக் கொண்டு உள்ளே போகின்றார். தொடர்ந்து மயூவைப் பார்க்க ராதிகாவின் அண்ணாவும் அண்ணியும் வருகின்றனர்.


அவர்கள் கோபியிடம் பேசிவிட்டு மயூவுக்கு ஒரு கிப்ட் வாங்கி வைச்சிருக்கிறேன் வாங்க பார்க்கலாம் என்று எல்லோரையும் கூட்டிட்டு போக கோபி ரூமுக்குள் தனியாகச் சென்று இனியாவிடம் மன்னிப்புக் கேட்கின்றார். அப்போது இனியா நான் டூருக்கு போறேன் டாடி என்னை அம்மா கூட்டிட்டு போறாங்க என்று சொல்கின்றார். இதைக் கேட்டு கோபி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement