தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
அதாவது எல்லோரும் சாப்பிடுவதற்காக இருக்கின்றனர். அப்போது எல்லோருக்கம் மீனா மட்டும் தனியாளாக நின்று சாப்பாடுகளை எடுத்து வைக்கின்றார்.இதனைப் பார்த்த ஜுவா மீனா தனியாக கஷ்டப்படுகின்றாளே என மனதுக்குள் வருத்தமடைகின்றார். எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பின் தனம்,ஐஸ்வர்யா,முல்லை ஆகியோர் கட்டிலில் இருந்து பேசிட்டு இருக்கின்றனர்.
மீனா மட்டும் கீழே படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். மீனாவுடன் பேச வந்த ஜுவா மீனா மட்டும் கீழே படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார். தொடர்ந்து அடுத்த நாள் மீனா எழும்பி கோலம் போட கண்ணன் வந்து ஐசு நேற்று சரியாக உறங்கினாளா என்று விசாரித்துக் கொண்டிருக்க பக்கத்து வீட்டுக்காரர் முல்லையைப் பார்க்க வருகின்றனர்.
முல்லை குளித்துக் கொண்டிருப்பதால் தனத்திடம் பேசிவிட்டு செல்கின்றனர். தொடர்ந்து மீனா மூன்று பேருக்கும் மாத்திரைகளை குடிக்க குடித்து விட்டு எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை கழுவச் சென்று விடுகின்றார். அப்போது ஜுவாவும் வந்து அவருக்கு உதவி செய்வதோடு இருவரும் ரொமான்ஸ் பண்ணுகின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!