தென்னிந்திய சினிமாவையே கலக்கி வரும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ரஷ்மிகா மந்தனா. இவர் நேஷனல் க்ரஷ் என்று சொல்லும் இந்திய அளவில் குறுகிய காலத்திலேயே வளர்ச்சி அடைந்திருக்கிறார். ஆனால் ராஷ்மிகா திரையுலகில் பிரபலம் அடைவதற்கு முன்னரே, காதலில் விழுந்து, காதலருடன் நிச்சயதார்த்தமும் நடந்து, பின்னர் ஒரு சில காரணங்களுக்காக அதை முறித்துக் கொண்டமை நம் அனைவருக்கும் தெரியும்.
அதாவது ராஷ்மிகா முதன்முதலில் கிரிக் பார்ட்டி என்ற ஒரு கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் இவருக்கு ஜோடியாக நடித்த ரக்ஷித் ஷெட்டி என்ற கன்னட நடிகருடன் தான் காதல் வயப்பட்டார். மேலும் படப்பிடிப்பின் போது முதலில் நல்ல நண்பர்களாக பழகி வந்த இவர்கள் பின்னர் ஈர்ப்பு அதிகரித்து, காதலை தெரிவித்துக் கொண்டனர்.
அத்தோடு பல மாதங்கள் இருவரும் டேட் செய்தனர். அதுமட்டுமல்லாது இவர்கள் இருவருக்கும் விமரிசையாக நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவிலேயே திருமண தேதியை அறிவிப்பதாக தன்னுடைய ரசிகர்களுக்கும் ராஷ்மிகா அறிவித்திருந்தார். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த சில வாரங்களிலேயே, அதாவது 2018 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரேக் அப் செய்து பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் ராஷ்மிகா குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது அவர் கூறுகையில் "ராஷ்மிகாவும் நானும் தற்போது கூட மெசேஜ் செய்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது "படங்கள் வெளிவரும் போது ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வோம். மேலும் ராஷ்மிகாவிற்கு சினிமாவில் அடைய வேண்டும் என பல கனவுகள் இருக்கிறது. அதை அவர் சரியாக புரிந்துகொண்டு தற்போது ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு நேஷனல் க்ரஷ் ஆகியுள்ளார்" எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக நிச்சயம் முடிந்து, கல்யாணம் வரை சென்று பின்னர் பிரிந்து கொண்ட இவர்கள் இருவரும் இன்றுவரை தொடர்பில் இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றது.
Listen News!