தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் சிறுத்தை சிவா இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு வெளியபன இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.
அந்த வகையில் அதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் இயக்குவதாக ஏற்கனவே அதன் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.இந்த படத்தின் பூஜை கடந்த 21ம் திகதி அகரம் பவுண்டேஷன் அமைந்துள்ள ராமாபுரத்தில் நடந்தது.
மேலும், இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குநராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குநராக பணிபுரிகிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!