• Sep 21 2024

என்கிட்ட இருக்கிற ஆண்மையை உங்களுக்கு காட்டவா?- தொகுப்பாளினியிடம் சர்ச்சையாகப் பேசி வாங்கிக் கட்டிய பயில்வான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பத்திரிகையாளராகவும் யூடியூப் பிரபலமாகவும் வலம் வருபவர் தான் பயில்வான் ரங்க நாதன். இவர் பல நடிகர் நடிகைகளைத் தவறாகப் பேசி பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். அந்த வகையில் அண்மையில் பாடகி சுஜித்திராவைப் பற்றி தவறாக பேசியிருந்தார்.

இதனால் சுஜித்ராவும் அவரை திட்டி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இவர் தற்பொழுது பிரபல சனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது தொகுப்பாளரான லயா சில கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். அந்த வகையில் அவர் கேட்டதாவது

பல குடும்பங்களை பயில்வான் கெடுக்கிறார் என்று சொல்லிறாங்களே அது உண்மையா என்று கேட்ட போது அப்படி ஒன்றும் இல்லை நான் வெளியில என்னோட போட்டோ எடுக்க ரெடியா இருக்காங்க என்று கூறினார். எல்லாப் பெண்களையும் பற்றி எதற்கு பேசிறீங்க என்று மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது பதில் கூறிய அவர் நான் பெண்களைப் பற்றி பேசவில்லை தவறான வழியில் நடக்கும் நடிகைகளைப் பற்றி தான் கூறுகின்றேன்.சினிமாவில் இருக்கும் சாக்கடைகளையும் கழிவுகளையும் சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்காகக் தான் கூறுகின்றேன் என்று கூறினார்

மேலும் சுஜித்ரா பற்றி போற போக்கில அது ஒரு பைத்தியம் அது ஒரு மனநோயாளி என்று ஏன் கூறுகின்றீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய பயில்வான் இதை நானா சொல்லல அவளோட கணவனான கார்த்திக் சொன்னதால தான் சொன்னேன். சுஜித்திரா கிட்ட பேசும் போது நீங்க கார்த்திக் குமாரை எதுக்கு விவாகரத்து செய்தீங்க என்று கேட்டா கூறமுடியாது என்று கூறுறாங்க. 2 வருஷமா உடம்பு சரியில்லாம இருந்தாங்க .

இப்போ அவங்க திரும்பவும் பேமஸ் ஆகனும் அதனால தான் என்னைப் பற்றி பேசி பேமஸ் ஆக நினைச்சிருக்கிறாங்க. என்னோட வாட்சப்ல அவங்க பேசினது என்ன என்றால் நான் விபச்சாரி இல்ல எல்லா நடிகைகளும் ஆடை இல்லாம நடிச்சிருக்கிறாங்க இதை சொல்லுவியா. நான் மோடியினுடைய உறவுக்காரர் . தனுஷ் உனக்கு பணம் தந்தானா இல்லை என்றால் கார்த்திக் குமார் காசு தந்தாரா என்னும் கேட்டதாக கூறியுள்ளார்.

மேலும் நடிகைகள் கிளாமராக போட்டோ எடுத்தா என்ன தப்பு என்று கேட்டபோது எதற்கு இப்படி போட்டோ எடுக்கிறீங்க உங்கட தொழில் என்ன நடிக்கிறது. அத மட்டும் பார்க்க வேண்டியது தானே எதற்கு ஆபாசமாக உடை போட்டு போட்டோ எடுக்கிறீங்க இது தப்பு தானே. இப்படி போட்டால் நான் பேசுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சினிமா என்று சொன்னாலே கிளாமராக ரெஸ் பண்றது தானே என்று கேட்ட போது ஏன் அப்படி இருந்தாங்களே அந்த காலத்தில சாவுத்திரி இந்த காலத்தில நதியா ரேவதி போன்றவர்கள் இருக்கிறாங்களே. அவங்கள போல காட்ட கூடாததை எல்லாம் காட்டாமல் நடிக்கலாமே என்று கூறுயுள்ளார்.

மேலும் தொகுப்பாளினி லயாவிடம் உங்க கிட்ட ஆண்மை இருக்கு என்று நிரூபிக்கவா என்று கேட்டபோது கோபமடைந்த லயா சேர் உங்கட ஆண்மையை நிரூபிக்க உங்களுக்கு மனைவி இருக்கு எனக்கு கணவன் இருக்கு என்று கூறினார். அத்தோடு நிர்வாணமாக நிற்கிற நடிகை ஒருவரின் போட்டோவ காட்டுறன் என்டீங்க போட்டோவ காட்டுங்க என்று கூறியபோது பயில்வான் போட்டோவை காட்ட மறுத்து விட்டார்.

மேலும் இப்படி தப்பா பேசி மக்களை எதுக்கு குழப்பிறீங்க நீங்க பேமஸ் ஆகணும் என்டதுக்காக அடுத்தவன் குடும்பத்தை திட்டுவீங்களா என்று கேட்டார். அத்தோடு சுஜித்ரா வாய் கிழிஞ்சவள் என்று நீங்க எப்படி சொல்லுவீங்க. நீங்க என்ன அழகாவா இருக்கிறீங்க . நீங்க பண்ற இந்த விடயம் எல்லாம் ஊர்ல வெட்டியா இருக்கிற பொண்ணுங்க தான் இப்படி பேசுவாங்க என்றும் தொகுப்பாளினி லயா கூறினார்.

மேலும் போனில் இருக்கும் போட்டோவை காட்ட மறுத்தது பயந்து தானே எனக் கேட்க நான் பயப்பிடல அப்பிடி காட்டினால் சட்டப்படி குற்றம் அதனால காட்டமாட்டேன். என்னோட போன் அது என்னோட தனிப்பட்ட விடயம் என்றும் இனிமேல் என்னை பேட்டி எடுக்கிற தென்றால் என்னோட வீடியோக்களை பார்த்திட்டு பேசுங்க என்று தொகுப்பாளினியைப் பற்றியும் கூறியுள்ளார்.

அடுத்ததாக நீங்க இப்படி பேசிறீங்க நீங்க வெளியால போகும் போது உங்கள கொன்று விட்டால் என்ன செய்வீங்க என்று கேட்ட போது நாங்க வாள் வைச்சிருக்கிற பரம்பரையைச் சேர்ந்தவன் . நான் சாதியைப் பற்றி பேசுவேன் நான் பனை அருவாள் ஜாதியைச் சேர்ந்தவன். என்னை யாரும் தாக்க வந்தால் பிளந்து கட்டிடுவேன் என்று கூறினார்.

அத்தோடு சினிமாவை சுத்தப்படுத்திறது தான் என்னோட வேலை இது என்னோட சமூக சேவை என்றும் கூறினார். அத்தோடு பத்திரிகை அறம் உன்ற ஒன்று கிடையவே கிடையாது எது நன்றாக ஓடுதோ அதை மட்டும் தான் எல்லாரும் பார்ப்பாங்க. இப்போ எல்லாமே வியாபர யுகமாக மாறி விட்டது எனக் கூறி இந்த பேட்டியை முடித்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement