'நாதஸ்வரம், பாரதி கண்ணம்மா, வாணி ராணி' எனப் பல சீரியல்களிலும் நடித்துப் பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
இவருக்கும் மிஸ்டர். தமிழ்நாடு பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. நடிகை ஸ்ருதியும் தனது கணவருடன் சேர்ந்து அவ்வப்போது சமூகவலைதளங்களில் ரிலீஸ் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இவரின் கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆன நிலையில் இவரின் இறப்பு பலரிற்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
30 வயதிலேயே அவர் மரணமடைந்துள்ளது அவரது குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மறைந்த தன் கணவருடைய நிறைய ஆடைகளை அவர் முதியோர் இல்லங்களுக்கும் சிறுவர் இல்லங்களுக்கும் வசதி இல்லாத பிள்ளைகளுக்கும் அவருடைய ஆடைகளை கொடுப்பதாக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!