தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவதோடு இந்த ஆண்டு பல சீரியல்கள் நிறைவுக்கு வருகின்றன. அந்த வகையில் ஷு தமிழிலும் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த 2 வருடங்களுக்கு மேலாக ஷு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் தான் ரெட்டை ரோஜா. இரட்டை சகோதரிகளில் ஒருவர் இறந்து விடுகின்றார். அவர் இறந்த பினன்னரும் தன்னுடன் பிறந்தவருக்கு நடக்கும் ஆபத்துக்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றார்.
இதில் நடிகை சாந்தினி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் இந்த சீரியல் வருகின்ற 17ம் தேதி வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!