இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த், இதையடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப் போது காதல் சர்ச்சையிலும் சிக்கி வருகின்றார்.
மேலும் கடந்த பல ஆண்டுகளுக்கு முதல் சமந்தாவைக் காதலித்து வந்தார்.இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பிரேக் அப் செய்து இருவரும் பிரிந்து விட்டனர்.
இதனை அடுத்து சித்தார்த் நடிகை அதிதி ராவ்வைக் காதலிப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து இருவரும் விளக்கம் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் தங்களது காதலை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று சென்னையில் நடக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவுக்கு ஜோடியாக வந்துள்ளனர். ஏற்கனவே காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், அவர்கள் ஜோடியாக வந்துள்ளது அவர்கள் இடையேயான காதலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மறுபுறம் சித்தார்த், அதிதி ராவ் இருவருமே மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ளனர். நடிகர் சித்தார்த் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் நடித்திருந்தார். அதேபோல் நடிகை அதிதி ராவ், மணிரத்னம் டைரக்ஷனில் வெளியான காற்று வெளியிடை மற்றும் செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!