• Sep 20 2024

குடிபோதையில் வீட்டிற்கு வரும் சில்வண்டுகள்! மகாவுக்கு காதலனால் வந்த அடுத்த டுவிஸ்ட்! சீதாராம் இன்றைய எபிசோட்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தாெலைக்காட்சியில்  ஔிபரப்பாகி வரும் சீரியல் தான் சீதா ராமன். இத் தொடர் சமூகத்தில் நடக்கும் உண்மையான  விடயங்களை, காதல் கதையுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையப்படுத்தி ஔிபரப்பாவதனால் ரசிகர் கூட்டம் அதிகமாகவே இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய  நாளுக்கான எபிசோட் வெளிவந்திருக்கின்றது. அதில் என்ன நடக்க போகின்றது என்பதனை பார்க்கலாம்.

அதன்படி, மூன்று சில்வண்டுகளும் வீட்டிலிந்து ரகசியமா வெளியே செல்வதற்கு தயார்க்கின்றனர். இத பார்த்த சீதா 'மூன்று பேரும் எங்க ரகசியமா போறீங்க? அதுவும் இந்த கட்ட சட்டைய போட்டுக்கொண்டு' என்று கேட்கிறார்.

அதுக்கு 'நாங்க எங்கட பிரண்ட்ட பிறந்தநாள் பாட்டிக்கு போறோம்' என்று சொல்ல, 'நீங்க போங்க ஆனா சட்டைய மாத்திட்டு போங்க, இப்படி கட்ட சட்டை போட்டு போக வேண்டாம்' என்று கண்டிச்சி அனுப்புகிறார் சீதா.


அதுக்கப்புறம் கோவமா உள்ள போன மூன்று பேரும், மகா சித்திட்ட  சொல்றாங்க 'சீதா எங்கள இந்த சட்ட போட்டு போக வேணாம் என்டு சொல்லுரா, அவ யாரு எங்களுக்கு சொல்ல என்டு" சொல்லுறாங்க. இதற்கு மகா, "ஆமா இது என்ன உடுப்பு, இப்படியா வெளிய போவீங்க.உடுப்ப மாத்திட்டு போங்க. எனக்கே பிடிக்கல என்டு சொல்லுரா" இத கேட்டு அதிர்ச்சியான 3 பேரும், சீதாவ பத்தி தப்பா சொல்லுறாங்க. அதோட மஹாவோட இருந்த அர்ச்சனாவும் " இப்ப நீ பிள்ளைகளை போக விடாட்டி சீதா இன்னும் கூட ஆடுவா" என்டு மகாவுக்கு ஏத்தி விடுரா.

ஒரு வழியா 'போங்க' என்டு மகா சொல்ல, சந்தோசமா மூன்று பேரும் போகும்போது சீதா பாத்துட்டு கேள்வி கேக்க, "எங்கள சித்தி போக சொல்லிட்டா" என்டு சொல்ல, "நான் நம்ப மாட்டன்.இங்கையே இருங்க நான் போய் கேட்டு வாரன்" என்டு போக வெளிக்கிடும் போது, அர்ச்சனா வந்து சொல்லுரா "நீ யாரு எங்க பிள்ளைகள தடுக்க. மகா சொல்லிட்டா போக சொல்லி" என்டு சொல்ல மூன்று பெரும் இதான் சாட்டு என்டு வெளிய போறாங்க. 

இதுக்கு பிறகு மகா கிட்ட  சீதா, "என் மேல இருக்க கோபத்தில பிள்ளைகள கெட்ட வழில நடத்தாதீங்க, காலங்கெட்டு கிடக்கு, அவங்க எங்க  போறாங்கன்னு தெரியுமா? யார் கிட்ட போறாங்கன்னு தெரியுமா? எந்த  பிரண்ட் என்று தெரியுமா?"என்டு கேக்க, "நான் அவங்களுக்கு நல்லது கேட்டது சொல்லி தான் வளத்து இருக்கன் நீ முதல்ல போ" என்டு சொல்லுறா மகா.

அதுக்கு சீதா, "உங்களுக்குத்தான் என்ன பிடிக்காது. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்க கம்பீரம் பிடிக்கும். ஆனால் உங்களுக்கு தான் என்ன பிடிக்காது" என்று சொல்ல, "இது என்ன நாடகம்" என்று சொல்லி சிரிச்சிட்டு  போறா மகாலட்சுமி. அதுக்குப்பிறகு இரவாகியும் "இன்னும் பிள்ளைகளை காணவில்லை என்று கவலைப்படுற சீதா" ஆனா "அவ வருவாங்கன்னு" சொல்லுறார் ராம். 


இன்னொரு பக்கம், குடிபோதையில் இருக்கும் மகாவின் முன்னாள் காதலனும் அவருடைய மனைவியும் அந்த டைம்ல மகாவுக்கு கோல் எடுத்து " நான் நாளைக்கு வேலைக்கு வரல. நான் வந்தா உனக்கு தான் கஷ்டம்" என்று சென்டிமென்டா கதைக்கிறார். இத நம்பின மகா, "நான் ஒரு பிரண்டா உனக்கு எல்லாம் செய்வேன். நீ நாளை கட்டாயம் வேலைக்கு வரவேணும்" என்று சொல்றா. இத கேட்டு,"வீட்டு கேட் ஓபன் ஆகிட்டு. அவள உள்ள புகுந்து விரட்டி அடிக்கனும்" என்று முன்னால் காதலன் பிளான் போட்டு சிரிக்கிறார்.

இதை அடுத்து, அஞ்சலி, பிரியா, அணு மூன்று பேரும் நல்லா குடிச்சிட்டு செம போதையில் வீட்டுக்கு வந்து ரூம்ல போய் தூங்குறாங்க. சத்தம் கேட்டு கீழ வந்த சீதா ராம்க்கு, "அவங்க குடிச்சிட்டு வந்து இருக்காங்க, ஒரே நாத்தமா இருக்கு,கார்ல 3 பீர் போத்தல் கிடந்து எடுத்தன்" என்டு வாட்ச்மேன் சொல்றார். 

அதுக்கு பிறகு அவங்க ரூம்க்கு போன சீதா ராம் அவங்க குடிச்சிட்டு கிடக்கிற நிலைய பாத்து கோவமா இருக்காங்க. இதோட இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement