• Sep 21 2024

மீண்டும் சிக்கலில் சிக்கிய சிம்பு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரைப்பிரபலங்கள் பலரும் எதிர்பாராத விதமாக ஏதோ ஒரு சிக்கலில் சிக்கிய வண்ணம் தான் இருக்கின்றனர். அந்தவகையில் நடிகர் சிம்புவும் தற்போது ஒரு சிக்கலில் சிக்கி இருக்கின்றார். அதாவது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தங்களது நிறுவனத்தின் தயாரிப்பதற்காக திட்டமிட்டபட்டிருந்த 'கொரோனா குமார்' என்ற படத்தில் நடிப்பதாக சிம்புவை ஒப்பந்தம் செய்திருந்தனர்.


அதுமட்டுமல்லாது இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்புவிற்கு ஒன்பரை கோடி ரூபாய் சம்பளமாக பேசியிருந்தார். இதனையடுத்து முன்பணமாக நான்கரை கோடி ரூபாயை கடந்த 2021-ஆம் ஆண்டு அளித்துள்ளனர். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு சிம்பு படப்பிடிக்கு வரவில்லை.


இதனால் குறித்த தயாரிப்பு நிறுவனம் சிம்புவின் மேல் மனுதாக்கல் செய்திருந்தது. அதாவது கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தது.


தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 19-ஆம் தேதிக்குள் ரூ.1 கோடிக்கான உத்தரவாதத்தை சிம்பு அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அளிக்காவிட்டால் அவர் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் எனவும் கூறி அதிரடி உத்தரவு ஒன்றினை சிம்புவிற்குப் பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement