தமிழ் சினிமா கடந்த ஒரு ஆண்டு காலமாக சற்று பின்னடைவை சந்தித்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் பெரிய கதாநாயர்களான ரஜினி, விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை என தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
எனினும் அதே சமயம் மற்ற மொழி படங்களான புஷ்பா, RRR, KGF ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. பான் இந்திய படமாக வெளியான இப்படங்கள் இந்தியா முழுவதும் வசூல் சாதனை செய்ததோடு தமிழ்நாட்டிலும் நல்ல வசூலை அள்ளிக்குவித்தது.
இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்துடன் யாஷ் நடிப்பில் உருவான KGF இரண்டாம் பாகமும் வெளியானது. மேலும் ஒருபக்கம் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற மறுபக்கம் KGF திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.
எனினும் இதன் காரணமாக சிலர் தமிழ் சினிமாவை குறை கூறி விமர்சிக்க துவங்கினர். தமிழ் படங்களின் தரம் குறைந்ததாகவும், மற்ற மொழி படங்கள் தமிழ் படங்களை முந்தியதாகவும் பேசிவந்தனர். இந்நிலையில் இதற்கு நடிகர் சிம்பு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.அந்த விசயம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சிம்பு, இப்போ எல்லாரும் பான் இந்தியா படம், பான் இந்தியா படம் என்று சொல்கின்றனர். அவர்களுக்கெல்லாம் உலகநாயகன் கமலின் மருதநாயகம் திரைப்படத்தில் இருந்து சில காட்சிகளை போட்டு காட்டினாள் போதும் என்றார் சிம்பு.தற்போது இவரின் கருத்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!