தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் தனது அயராத உழைப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் சிம்பு. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்ததால் அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்த நிலையில் தற்பொழுது "வெந்து தணிந்தது காடு",'பத்து தல'ஆகிய படங்களில் வருகின்றார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,இவரது நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
அதே போல கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் தான் பத்து தல. இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறதைக் காணலாம்.
Listen News!