தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா' 'அச்சம் என்பது மடமையடா'ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் கெளதம் மேனன் கை கோர்த்துள்ளார்.
அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்.செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர் வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. இதனிடையே, சிம்பு குறித்து பேசியுள்ள கெளதம் மேனன், "சிம்பு ஒரு கம்ஃபர்ட்டான ஆளு, அவரு கூட ஒர்க் பண்றதா இருந்தா எவ்ளோனாலும் ஒர்க் பன்ணலாம்" என சூப்பர் சர்டிஃபிக்கேட் கொடுத்துள்ளார்.
இதைப் பார்த்த சிம்பு ரசிகர்கள், இந்தக் கூட்டணி மீண்டும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் 2ம் பாகத்தில் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.இது தவிர சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ‘சிங்கம் 3’ படத்தில் இணையும் முக்கிய நடிகர்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!
- விமர்சனம் செய்தவர்களுக்கு விஜய் கொடுத்த மற்றுமோர் பதிலடி…வைரலாகும் புகைப்படங்கள்..!
- அதில் எவ்வித உண்மையும் இல்லை…என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள்…ரசிகர்களிடம் கெஞ்சிய பிரபல நடிகர்..!
- மாடு வாங்கியிருக்காரா மா.க.பா.ஆனந்த்..?என்னப்பா ஆளாளுக்கு மாடு வாங்கிறீங்க..! விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்..!
- வெள்ளை உடையில் நீரில் மிதந்து வரும் அனிகா..கூடவே ரம்புட்டானுமா…கலாய்க்கும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!