• Sep 20 2024

இத்தனை கோடி வசூல்னு பொய் சொல்ல சொன்னார் சிம்பு- உண்மையை உடைத்த திருப்பூர் சுப்பிரமணியம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பிரபலமான கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவரே வாரிசு நடிகரான சிம்பு. முன்னணி நடிகர் டி.ராஜேந்திரனின் மகனான இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

லிட்டில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற இவரின் நடிப்பையும் நடனத்தையும் ரசிப்பதற்கு என்றே பல ரசிகர் கூட்டம் உண்டு. நடிகர் சிம்பு தொடர்ந்தும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் 'மாநாடு' படம் வெளியாகி இருக்கின்றது. இந்தப் படத்தில் இவரோடு இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்படப் பலரும் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கின்றார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது சிம்புவின் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரியளவிலான வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர் மற்றும் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.

அதில் " மாநாடு படத்தின் உடைய தயாரிப்பாளர் அந்த படத்தின் சக்சஸ் மீட் டுக்கு என்னை வருமாறு அழைத்திருந்தார். அந்த படத்திற்காக நான் அவர்களுக்கு என்னால் முடிந்த நிறைய உதவிகளை செய்து இருக்கிறேன்." எனக்கூறியிருந்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில் "சிம்பு என்னிடம் போன் பண்ணி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று பொய் சொல்ல சொன்னார். அதற்கு நான் உடனே இதுவரை எவ்வளவு வசூல் செய்து இருக்கின்றது என்று கேட்டேன். அதற்கு அவர் 71 கோடி தான் என்று சொன்னார். அதைக்கேட்ட நான் பொய் சொல்ல வேண்டாம், அதையே சொல்லுங்கள் என்று சொன்னதற்கு, 100 கோடி ரூபாய் என்று சொன்னால் தான் வருவேன் என்று சிம்பு கூறியிருக்கிறார்.சிம்பு இவ்வாறு கூறியதாக இதை என்னிடம் தயாரிப்பாளர் தான் சொன்னார்." என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்.

திருப்பூர் சுப்பிரமணியம் அளித்திருந்த இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அது மட்டுமல்லாது 'மாநாடு' படத்தின் வெற்றி விழாவிற்கு சிம்பு வராமைக்கான காரணமும் இது தானா என்ற ஆச்சரியத்தில் உள்ளனர் சிம்பு ரசிகர்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement