தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது உடல் எடையை குறைத்த பின்னர் மறுபடியும் சினிமாவில் படு பிசியாகி உள்ளார். இதற்கு முக்கியமான காரணம் என்னவெனில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'மாநாடு' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானது தான்.
இதனைத் தொடர்ந்து தற்போது 'பத்து தல' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தை இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்குப் பின்னர் சிம்புவின் கைவசம் 'கொரோனா குமார், வெந்து தணிந்தது காடு 2-ம் பாகம், விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம்' போன்ற படங்கள் உள்ளன.
பத்து தல படத்தைத் தொடர்ந்து அவர் வெந்து தணிந்தது காடு 2-ம் பாகத்தில் தான் அடுத்ததாக நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் இன்னும் முடிவடையாது உள்ளமையால் அவர் நடிக்கும் அடுத்த படம் தற்போது மாற்றப்பட்டு உள்ளது.
அதாவது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தான் சிம்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா.
இப்படமானது ரிலீசாகி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான முக்கிய காரணம் அப்படத்தில் நடித்த சிம்பு - திரிஷா இடையேயான கெமிஸ்ட்ரி தான்.
அப்படத்தில் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த காதல் ஜோடிகளாக நடித்திருந்த சிம்புவும், திரிஷாவும் தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் மூலம் மீண்டும் ரொமான்ஸ் செய்ய தயாராகி வருகின்றனர்.
இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் யாவும் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சிம்பு - த்ரிஷா கூட்டணி வெளியிடவுள்ள இந்தக் காதல் படம் குறித்த குட் நியூஸுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் தான் அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைப்பார் என கூறப்படுகிறது.
Listen News!