தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, இவர் நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும் தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் இறுதியாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார்.
அப்படத்தை அடுத்து பத்துதல என்னும் படத்தில் நடித்து வருகின்றார். மேலும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் தீ தளபதி என்னும் பாடலை பாடியிருந்தார். இப்பாடல் கூட அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
நடிப்பைத் தாண்டி நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால், போன்ற சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கிய சிம்பு 39 வயதை எட்டிய போதிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.
எனவே அவவ்போது இவருடைய திருமணம் குறித்து அடிக்கடி, வதந்திகள் எழுவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. சமீபத்தில் கூட, சிம்பு நடிகை லட்சுமிமேனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் அந்த வதந்தியும், வந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.
சிம்பு உருகி உருகி காதலித்த நயன்தாரா மற்றும் ஹன்சிகா இருவருமே, இந்த ஆண்டு தங்களுடைய காதலர்களை கரம் பிடித்த நிலையில்... தற்போது சிம்புவின் திருமணம் குறித்து சிம்புவின் தந்தை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
இது குறித்து டி.ராஜேந்தர் கூறியுள்ளதாவது, சீக்கிரமே என் மகனுக்கு திருமண நடக்கும் என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட, என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட,. இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் என்னை பார்த்தாலும் எப்போது என் மகனுக்கு திருமணம் என்று கேட்கிறார்கள்? கடவுளின் அருளால் சீக்கிரமே என் மகன் திருமணம் நடக்கும். என டி ராஜேந்தர் கூறியுள்ளார்.
இந்த வருடம் சிம்பு ரசிகர்களுக்கு திருமண செய்தி கூறாவிட்டாலும், அடுத்து ஆண்டில் கண்டிப்பாக திருமணம் குறித்த தகவலை வெளியிட வேண்டும் என சிம்புவின் ரசிகர்கள் இப்போதே தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க துவங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!