ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்திலும், சிம்பு நடிப்பிலும் தற்போது 'பத்து தல' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி இல்லை என்று கூறப்படுகின்றது. இருப்பினும் முக்கிய கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் எனப் பலரும் நடித்துள்ளனர்.
அத்தோடு இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்துக்காக அவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் வேறலெவலில் ஹிட் அடித்துள்ளன. அத்தோடு மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் ஏஜிஆர் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
தற்போது பத்து தல திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பாக்கிகள் யாவும் நிறைவடைந்து நாளை மார்ச் 30-ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. பத்து தல படத்தின் மூலம் சிம்பு ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
வழக்கமாக சிம்பு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் இறுதி நேரம் வரை படம் வெளியாகுமா? இல்லையா? என்ற பரபரப்பு இருக்கும். அந்த பரபரப்பு தற்போது பத்து தல படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. அதாவது பத்து தல படத்தின் ரிலீசுக்கு பிரச்சனை இல்லை என்றாலும், அப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி தர மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக பத்து தல படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்காததால் 8 மணிக்கே பத்து தல படத்தின் முதல் காட்சி திரையிடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். அதாவது படம் சிக்கலின்றி நாளை வெளியாகும் என்றாலும் அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளமை ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது..
Listen News!