நேற்றைய தினம் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த 'பத்து தல' திரைப்படம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இப்படமானது ரசிகர்களிடமிருந்து சிறந்த வரவேற்பையும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இந்நிலையில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக சிம்புவின் தாயான உஷா ராஜேந்தர் திரையரங்கிற்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் அவரிடம் சிம்புவின் திருமணம் பற்றி நிருபர்களிடம் ஓப்பனாக பேசியிருந்தார் உஷா ராஜேந்தர். தற்போது 39 வயதாகும் சிம்புவிற்கு எப்போது திருமணம் என்ற கேள்வி தான் ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமல்லாது சிம்புவின் திருமணம் பற்றி பல செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. சிம்புவும் சரி, அவரின் பெற்றோர்களும் சரி எங்கே சென்றாலும் அனைவராலும் கேட்கப்படும் கேள்வி சிம்புவின் திருமணம் எப்போது என்பது தான். இந்நிலையில் உஷா ராஜேந்தர் கூறுகையில் "எப்போதும் இதே கேள்வியே கேட்கின்றீர்களே, இதை சிம்புவிடம் நேரடியாக கேளுங்கள்" என்றார்.
அத்தோடு "விரைவில் சிம்புவிற்கு திருமணம் கண்டிப்பாக நடக்கும்" எனவும் கூறியிருந்தார் சிம்புவின் தயாரான உஷா ராஜேந்தர். இந்த செய்தியானது சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.
Listen News!