90களில் இடையழகி என பெயர் எடுத்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் தன்னுடைய நடனத்தாலும், நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் அதுமட்டுமல்லாமல் தன் அழகினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களில் ஜோடி போட்டு நடித்தவர்.
அந்த வகையில் துள்ளாத மனமும் துள்ளும், வாலி, நேருக்கு நேர் உள்ளிட்ட படங்களை கூறலாம்.தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
சிம்ரன் இத்தனை வருடங்கள் கடந்தும் தற்போதும் அதே ஒல்லி லுக்கில் இருந்து வருவது அவரது ரசிகர்கள் எப்போதும் ஆச்சர்யமாக பார்க்கும் விஷயம்.மேலும் இத்தனை வருடங்கள் கழித்தும் அவர் தற்போதும் அதே எனர்ஜியுடன் நடித்து வருகிறார்.
இவ்வாறுஇருக்கையில் இவர் தனது சிறுவயது தோழனான தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகு சிம்ரன் சினிமாவின் பக்கம் தலைகாட்டாமல் இருந்துள்ளார்.
அதன் பின்னர் நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார் . அண்மையில், சிம்ரன் தன்னுடைய இரண்டு பசங்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைபடம் இப்பொழுது தீயாய் பரவி வருகின்றது.
Listen News!