• Sep 20 2024

’பவர் ஆஃப் வுமன்’ என்ற விருதினைப் பெற்ற சிம்ரன்-அதுவும் யார் வழங்கியது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவர் என்பதோடு தனது நடன திறமையால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் சிம்ரனுக்கு ’பவர் ஆஃப் வுமன்’ என்ற விருது சமீபத்தில் அளிக்கப்பட்டது.

இந்த விருதை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் வழங்க சிம்ரன் பெற்று கொண்டார். இதுகுறித்து நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராமில் கூறியபோது, ‘துர்கா ஸ்டாலின் அவர்களிடமிருந்து ’பவர் ஆப் உமன்’ என்ற விருதை பெற்றதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது.

அவருடைய எளிமையான தோற்றம் மற்றும் ஆளுமையை நான் எப்போதும் பார்த்து ரசித்து இருக்கின்றேன். இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement