கனடா வாழ் பாடகியான ஜோனிடா காந்தி இதுவரை ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.
மேலும் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடி தமிழில் அறிமுகமான இவர் ஓகே கண்மணி படத்தில் பாடியதன் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து இறைவா, செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து போன்ற பாடல்களை பாடி பட்டிதொட்டி எங்கும் கலக்கினார்.
இவ்வாறு சினிமாவில் பிசியாக இருந்து வந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார். அதில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றி வருவார். இந்நிலையில் இப்போதும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் "ஹீரோயின் மாதிரி இருக்கீங்க" எனக் கூறி வருகின்றனர்.
Listen News!